திங்கள், ஜூலை 29, 2013

மார்ட்டின் லூதர் கிங் நினைவகம் (அமெரிக்கா) + அவரது கடைசி உரை


மார்ட்டின் லூதர் கிங் நினைவகத்தில் உள்ள படம் 
ஆறு மாத அமெரிக்கப் பயணம் முடிவடையும் தறுவாயில், அட்லாண்ட்டாவில் மகன் வீட்டில் பன்னிரண்டு நாட்கள் செலவழிக்க முடிந்தது. அதை விட மனநிறைவளித்த நிகழ்ச்சி, 1929ஆம் வருடம் ஜனவரி 15ஆம் நாள் அட்லாண்ட்டாவில் பிறந்து, 1968 ஆம் வருடம் ஏப்ரல் 4ஆம் நாள் கொலையாளி ஒருவனின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியான காந்தீயப் போராளி, கறுப்பினத் தலைவர், மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) வீட்டில் சில மணி நேரம் செலவழிக்க முடிந்தது தான். 

ஞாயிறு, ஜூலை 21, 2013

ஆடி வெள்ளியில் அட்லாண்ட்டாவில் மகாலட்சுமி தரிசனம்

அட்லாண்ட்டா -மகாகணபதி-(கோவில் இணையதளத்திலிருந்து)
 மகனைப் பார்ப்பதற்காக அட்லாண்ட்டா வந்தோம். சென்னை மாதிரியே வெயில். சென்னை மாதிரியே இந்தியப் பொருள்கள் எது வேண்டுமானாலும் கிடைக்கும் பெரும் கடைகள். நகரின் நடுநாயகமான இடத்தில்  இருபத்து நான்கு மாடி அடுக்கில் பதினான்காவது மாடி. எதிரில் ஹயாத் ரீஜென்சி ஓட்டல். சன்டிரஸ்ட் பாங்க். சற்று நடந்தால் குழந்தைகள் மியூசியமும், அமெரிக்காவிலேயே பெரியதான ‘அக்வேரிய’மும். 1996ல் ஒலிம்பிக் போட்டிகள் இவ்வூரில் நடந்தபோது ஏற்படுத்தப்பட்ட ‘செண்ட்டீனியல் ஒலிம்பிக் பார்க்’கும் அருகிலேயே உள்ளது.

நேற்று (19.7.2013) வெள்ளிக்கிழமை. காலை முதலே மழை தூறிக் கொண்டிருந்தது. அதே சமயம் வெயிலின் தாக்கமும் குறையவில்லை. ரிவர்டேல் (Riverdale) என்ற இடத்தில் இருக்கும் கோவிலுக்குச் சென்று வரலாமே என்று தோன்றியது. கிளம்பிய பிறகு தான் ‘இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை’ என்பது நினைவுக்கு வந்தது. 

சனி, ஜூலை 13, 2013

அல்லா-ஹூ-அக்பர் – மேல்விஷாரம் நினைவுகள்

பதினொன்றாம் வகுப்பு தேறியவுடன் கல்லூரியில் சேர வேண்டுமென்று கனவு கண்டேன். ஆனால் நம்பிக்கை கொள்ளவில்லை. காரணம் இராணிப்பேட்டையில் கல்லூரி எதுவும் இல்லை. ஒரு மணிநேரம் பயணித்தால் வேலூரில் ‘ஊரீஸ்’ என்னும் பழம்பெரும் கல்லூரி இருந்தது. ஆனால் தினசரிப் பயணம் செய்யவும் தனியார் கல்லூரிக்கான கட்டணம் செலுத்தவும் வசதியிருக்கவில்லை.

இராணிப்பேட்டையும் அதன் அருகிலுள்ள மேல்விஷாரம், வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரியும் முஸ்லீம் ஜனத்தொகை அதிகம் கொண்ட ஊர்களாகும். இராணிப்பேட்டையிலும் குடியாத்தத்திலும் அப்போது எண்ணற்ற பீடித் தொழிற்சாலைகள் இருந்தன. பீடி இலைகளைத் தொழிற்சாலையிலிருந்து பெற்று அதை பீடியாகச் சுற்றுவதும், அந்த பீடிக்கு மேல் ‘மஹாராஜா பீடி’ ‘ஜாடி பீடி’ போன்ற லேபிள்களை ஒட்டுவதும் ஏழைகளின் இரண்டு முக்கிய தொழில்கள்.

புதன், ஜூலை 10, 2013

ஆவிகளுடன் சில அனுபவங்கள் (5)


இவ்வரிசையில் முந்தைய பதிவுகளைப் படிக்க:
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (1)
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)

1974ல் வங்கிப்பணியில் சேர்ந்தேன். கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டிருந்த பழம்பெரும் தனியார் வங்கியில் சென்னை -தி.நகர் கிளையில் அதிகாரியாக நுழைந்தேன். 1975ல் கடலூரில் துவங்க இருந்த புதிய கிளைக்கு மேலாளராக நியமிக்கப்பட்டேன். டிசம்பர் எட்டாம் தேதி சனிக்கிழமை யன்று திறப்பு விழா.


நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல சேவைக்காகப் பெருமதிப்பு பெற்றிருந்தது இவ்வங்கி. எனவே வியாபார நிறுவனங்கள் அதிகம் இருந்த திருப்பாதிரிப்புலியூரை விட்டுவிட்டு, பள்ளிகள், அரசு அலுவலகங்கள், சுய தொழில் புரியும் டாக்டர்கள், வக்கீல்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புக்கள் நிறைந்த இடமான மஞ்சகுப்பம் என்ற பகுதியில் இடம் பார்க்கப்பட்டது.

ஞாயிறு, ஜூலை 07, 2013

‘கல்கி’ யும் மலர்களும் வண்ணத்துப்பூச்சிகளும்- (மீண்டும் அமெரிக்கா - 5)


Orchids - New York Botanical Garden – 12 March 2013


அமெரிக்கா வரும்போதெல்லாம் அதிகம் சென்று பார்ப்பது தாவரவியல் பூங்காக்களையும், வண்ணத்துப்பூச்சிப் பூங்காக்களையும் தான். நிறைய படங்கள் சேர்ந்துவிட்டன. இவற்றைக் கோர்த்து எழுத வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தேன்.
கூகுளில் எதையோ தேடும் போது திடீரென்று கிடைத்தது, கல்கி நாவல்களுக்கான “Apps”.   



வெள்ளி, ஜூலை 05, 2013

ஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)

இவ்வரிசையில் முந்தைய பதிவுகளைப் படிக்க:
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (1)
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)

நாயர் திரும்பி வந்து அந்த மண்டையோட்டை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வதற்குள் என் மனத்தில் தோன்றி மறைந்த அச்சமூட்டும் எண்ணங்கள் எவ்வளவென்று கணக்கிடவே முடியாது.


படிக்கட்டில்  நிற்கும் பேய் ?
ஒரு வேளை நாயர் வராமல் போய்விட்டால்? இந்த மண்டையோட்டை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

பொழுது கொஞ்சம் கொஞ்சமாகப் புலர்ந்துகொண்டிருந்தது. ஆற்றில் குளிப்பதற்காக எங்கள் தெருவிலிருந்து வயதானவர்கள் பலர் ஆற்றங்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களில் யாராவது என்னைப் பார்த்துவிட்டு தாத்தாவிடம் சொல்லிவிட்டால்?

குளிக்க வருபவர்களில் எனக்கு ‘பிராத்மிக்’ கற்றுத்தரும் ஹிந்தி ஆசிரியரும் இருக்கக்கூடும். அவர் மட்டும் பார்த்துவிட்டால் ஹெட்மாஸ்டரிடம் விஷயம் போய்விடும். அதன் பிறகு என் பெயர் ‘மண்டையோடு’ என்றே ஆகிவிடும்.

புதன், ஜூலை 03, 2013

ஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)



இவ்வரிசையில் முந்தைய பதிவுகளைப் படிக்க:
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (1)
ஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)

எப்படியும் இந்தக் கோடை விடுமுறையில் குட்டிச் சாத்தானை வசப்படுத்திவிடுவது என்று தீர்மானித்திருந்தேன் அல்லவா? அதற்குத் தகுந்தாற்போல் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

பேய் மாதிரி இல்லை?
எங்கள் எதிர்வீட்டில் ஒரு வயதான தம்பதியர் இருந்தனர். இருவருக்கும் வயது தொண்ணூறுக்கும் மேல். வீடே அவர்களுடையது இல்லை என்றும், உரிமையாளர் வாரிசின்றி இறந்துபோனதால் இவர்கள் ஐம்பது வருடங்களாக அங்கேயே தங்கிவிட்டார்கள் என்றும், இரண்டு பால்மாடுகளை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார்கள் என்றும் தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்போது வீட்டின் முன்புறத்தை வாடகைக்கு விட்டு அதில் தான் பிழைப்பு நடக்கிறதாம்.